கடவுளிடம்
அறிவைக்கேட்டேன்அவிழ்ப்பதற்கு வாழ்க்கையில் புதிர்களை தந்தார்.
வாழ்வில் மகிழ்ச்சியைக் கேட்டேன்என்னிலும் அல்லலுறும் மனிதர்களைக் காண்பித்தார்.
சொத்துக்களைக் கேட்டேன்சோர்வின்றி உழைக்கச் சொன்னார்
வரங்கள் கேட்டேன்வாய்ப்புக்கள் தந்தார்
அமைதி கேட்டேன்அடுத்தவர்க்கு உதவும் வழிகளை காட்டினார்.
நான் கேட்ட எதுவும் கடவுள் கொடுக்கவில்லை
ஆனால்நான் தேடிய அனைத்தும் எனக்கு கிடைத்தது.
விவேகானந்தர்
Saturday, September 03, 2005
Thursday, September 01, 2005
கனவுகள் என்பது என்ன - என் பார்வையில்
ஒவ்வொரு நாளும் நாம் அறிந்தும் அறியாமலும்தெரிந்தும் தெரியாமலும் நமது ஐம்புலன் மூலமாக எவ்வளவோ செய்திகளைச் சேகரிக்கிறோம். ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கும் பொழுது நமது மூளை (வேலை இல்லாத நாட்களில் sunday வீட்டை ஒழுங்கு படுத்துதல் போல) நாம் சேகரித்த செய்திகளை அது சம்பந்தப்பட்ட பழைய செய்தி சேமிக்கபட்ட நினைவு அறைகளிலோ அல்லது அதன் தொடர்புடைய பக்கத்து அறைகளிலோ நிரந்தர சேமிப்பாக மாற்றுகிறது. அத்துடன் பழைய செய்திக்கும் புதிய செய்திக்கும் சேர்ந்த இணை இழைகளை (Hyper link) குறிப்பேட்டு பகுதிகளில் எழுதி ஒரு மிகப்பெரிய இணையதள வலைப்பின்னல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு செய்தித்துணுக்கு எவ்வளவு இணைப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேடுதலில் வேகமாக கிடைக்கிறது (Google போல). ஆனால் இப்படி செய்திகளை அடுக்கும் வேளை நடக்கும் பொழுது தற்காலிகமாக இன்றைய செய்தியையும் கடந்த காலச்செய்தியையும் கலந்த ஒரு குழப்பமான ஒரு நினைவு (எக்கச்சக்கமான hyperlink உள்ள ஒரு வலைத்தளம் எப்படி நாம் புறப்பட்ட இடத்திலிருந்து சம்பந்தமில்லாத பல தகவல்களைத்தேடி சேகரித்து ஒரு கலவையான அறிவைப்பெறுகிறோமோ ) கனவாக பரிணமிக்கிறது என்பதே என் எண்ணம்.
Friday, August 26, 2005
இந்து மதத்தில் அறிவியல் (2)- சோதனைக்குழாய் குழந்தை
மகா பாரதத்திலிருந்து -குந்திக்கு தருமர் பிறந்த செய்தி கேட்ட காந்தாரி தனக்கு இன்னும் குழந்தை பிறக்காததால் கோபமுற்று தன் கருவினை சுவற்றில் முட்டி ப்ரசவத்தை துரிதப்படுத்தினாள். ஆனால் பிறந்த்ததோ ஒரு பெரும் சதைப்பிண்டம். அதனால் வேதனையுற்ற காந்தாரி முனிவர் வியாசரிடம்வேண்ட அவர் அந்த சதைப்பிண்டத்தை 100 பங்காக பிரித்து 100 குடங்களில் இட்டார். பின் எஞ்சிய ஒரு பகுதியை மற்றொரு குடத்திலிட்டார். அந்தக்குடங்களில் இருந்து துரியோதனனும் அவனுடைய 99 சகோதரர்களும் ஒரு சகோதரி (துஷ்சலா)யும் பிறந்ந்தனர்.
இதில் வ்யாசர் செய்தது சோதனைக்குழாய் குழந்தை அல்லது க்ளோனிங் வகையை நினைவு படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது
இதில் வ்யாசர் செய்தது சோதனைக்குழாய் குழந்தை அல்லது க்ளோனிங் வகையை நினைவு படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது
Friday, August 05, 2005
இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி விஷ்ணுவின் தசாவதாரம் மூலமாக கோடிட்டு காட்டப்படுகிறது.
1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)
2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)
3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)
4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)
5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)
6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)
8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)
9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்)
10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)
1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)
2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)
3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)
4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)
5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)
6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)
8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)
9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்)
10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)
Saturday, June 18, 2005
ஆண்டவன் ஓர் அனுபவம்
ஆண்டவன்
பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.
- கண்ணதாசன்
பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.
- கண்ணதாசன்
Friday, June 17, 2005
Subscribe to:
Posts (Atom)