Saturday, June 18, 2005

ஆண்டவன் ஓர் அனுபவம்

ஆண்டவன்

பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்

வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்

அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

- கண்ணதாசன்

Friday, June 17, 2005

முதல் பயணம்

சிறகடித்து பறக்கும் சிந்தனைகளை இணயத்தில் பதிக்க என் முதலடி.