Friday, March 31, 2006

மறு பிறவி பற்றி என்னுடைய கருத்து

முழு பிரபஞ்ச ஆன்மாக்களும் சேர்ந்த ஒரு பரமாத்மாவை ஒரு பெரிய கடலுக்கு ஒப்பிடுவோம். அதிலிருந்து ஒரு பாத்திரம் (உடல்) மூலம் சிறிது நீர் எடுப்போம் (பிறவி). பின் அந்த பிறவியின் கர்மத்தை பொருத்து அந்த நீரின் நிறம் (ஆன்மாவின் வாசனை) மாறுகிறது. இப்பொழுது அந்த நீரை மீண்டும் அந்த பரமாத்மாவான கடலில் கொட்டுவோம் (இறந்து படுவோம்). இப்பொழுது அந்த பாத்திரத்தின் நீர் அந்த பரமாத்மாவின் தன்மையுடன் ஒன்றி விடுகிறது. (ஆனால் அது ஒன்றும் முன்னால்) ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள சிவப்பு நிற திரவத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள தெளிந்த நீரின் மேல் கொட்டுவோம். அந்த கொட்டிய நீர் கலக்கும் முன்னால் வெகு வேகமாக அது வீழ்ந்த இடத்தில் இருக்கும் நீரை வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் (புது உடலில்) பிடித்தால் அந்த நீர் ஓரளவு பழைய சிவப்பு நிறத்தின் சாயல் இருக்கும். அது போல்தான் மறு பிறப்பு என்பது என் எண்ணம். இறந்த உடனடியாக மறு பிறப்பெடுத்தால் முன்பிறவி வாசனை இருக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிது காலம் கழித்து பிறந்தால் அது மற்றும் ஒரு புதிய பிறவி எனக் கொள்ளாமே தவிர அது மறுபிறப்பாகாது. மேலும் அந்தபிறவி பல்வேறு பிறவிகளின் ஒரு கலவையான பிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Sunday, March 05, 2006

ஜாதகம் - (பிறப்பேடு) என்பது என்ன

ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த தேதி பற்றிய விவரக்குறிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை வெறும் சொற்களாலேயே குறிப்பிட முடியுமே அதற்கு எதற்காக ஒரு வரைபடம் அதில் கிரகங்களின் நிலை போன்ற விவரம்? உண்மையில் வரைபடமே மிகவும் முக்கியமானது. காலண்டர் எனும் நாட்காட்டி மனித சரித்திரத்தில் எத்தனையோ முறை மாற்றபட்டிருக்கிறது. உலகில் எத்தனையோ காலண்டர்கள் உள்ளன.ஆனால் ஜாதக வரைபடம் கிரக நிலைகளை பிறந்த ஊர், நேரம், இடம் இவற்றைச்சார்ந்த தாக எழுதப்படுகிறது. அதனால் எத்தனை ஆயிரம் வருடம் ஆனாலும் ஒருவரின் ஜாதக வரைபடம் மட்டும் இருந்தால் போதும். அவர் எத்தனை ஆண்டுகள் முன் பிறந்தார் எங்கு பிறந்தார் என்ன நேரத்தில் பிறந்தார் என்பதை எள்ளளவும் பிழையின்றி கண்டுபிடிக்க முடியும். இப்படி ஓர் அற்புதமான முறையைக் கண்டு பிடித்த முன்னோர்களின் அறிவைப்பாராட்டுவோம்.

சோதிடம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் ஜாதகம் என்பது Carbon Dating போல ஒரு அறிவியல் அற்புதம்

Monday, February 27, 2006

டெலி விஷத்திற்கு மருந்து

சமீபத்தில்
மதி கந்தசாமி
அவர்களின் பதிவை பார்த்த பிறகு எழுந்த எண்ண அலைகள்

இது WORLD SPACE க்கான விளம்பரப்பதிவல்ல. ஆனால் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் எண்ணத்தில் எழுதுகிறேன். கடந்த மூன்று வருடங்களாக என் வீட்டில் இரவில் யாரும் உன்னை அழித்துவிட்டுத்தான் மறு வேலை உன்னை நடுதெருவுக்கு கொண்டுவருவேன் என்றெல்லாம் சொல்வதில்லை. காரணம் WORLD SPACE RADIO.

24 மணி நேரமும் இடைவிடாத (FM Radio போல்)அனாவசியமான பிதற்றல்கள் அற்ற இசை மழை. தொலைக்காட்சி என்னும் தொல்லைக்காட்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி.
மேல் விவரத்திற்கு
http://www.worldspaceasia.com/

Wednesday, February 22, 2006

இந்தியா எனும் அதிசயம்

இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு கல்வித்திரைப்படம் ஐ மேக்ஸ் முறையில் வெளி வந்திருப்பதாக தெரிகிறது. இதைப்பார்த்தவர்கள் யாராவது கருத்து தெரிவித்தால் நல்லது.

http://www.mysticindia.com/
http://www.imax.com/ImaxWeb/welcome.do

Tuesday, February 21, 2006

பிறரை அழவிட ஆசையா ?

நீ இறந்த பிறகு அதிக மனிதர்கள் அழ வேண்டுமா
நீ வாழும்பொழுது அதிக மனிதர்களை சிரிக்கவை (மகிழ்ச்சியை கொடு)

இன்றைய என் எண்ணம்

Saturday, January 28, 2006

தமிழ் மண்த்தின் கட்டுப்பாடு

சமீப காலமாக தமிழ் மண்த்தின் கட்டுப்பாடு பற்றிய பல கருத்துக்களை படித்த பின் எனக்குத்தோன்றியது.

எங்கே கட்டு மீறிய சுதந்திரம் மற்றவர் சுதந்திரத்தில் தலையிடுகிறதோ அங்கே கட்டுப்பாடு தேவையாகிறது.

காசி அவர்கள் செய்தது மிகவும் சரியே. கருத்துள்ள கருத்துக்களை தடை செய்வது அவர் நோக்கமல்ல. தரம் தாழ்ந்த கருத்துக்களை தடை செய்வது தவறான செயலுமல்ல.

அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த கருத்துக்களை படிக்கும் பொழுது என் மனதில் தோன்றும் ஒரு வசனம்

அறிஞர் அண்ணா எழுதியது என்று நினைக்கிறேன்.

சாலையோரத்திலே வேலையற்றதுகள்வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ண்ங்கள்

Saturday, September 03, 2005

கடவுளிடம் கேட்ட வரம்

கடவுளிடம்


அறிவைக்கேட்டேன்அவிழ்ப்பதற்கு வாழ்க்கையில் புதிர்களை தந்தார்.

வாழ்வில் மகிழ்ச்சியைக் கேட்டேன்என்னிலும் அல்லலுறும் மனிதர்களைக் காண்பித்தார்.


சொத்துக்களைக் கேட்டேன்சோர்வின்றி உழைக்கச் சொன்னார்

வரங்கள் கேட்டேன்வாய்ப்புக்கள் தந்தார்

அமைதி கேட்டேன்அடுத்தவர்க்கு உதவும் வழிகளை காட்டினார்.



நான் கேட்ட எதுவும் கடவுள் கொடுக்கவில்லை
ஆனால்நான் தேடிய அனைத்தும் எனக்கு கிடைத்தது.

விவேகானந்தர்

Thursday, September 01, 2005

கனவுகள் என்பது என்ன - என் பார்வையில்

ஒவ்வொரு நாளும் நாம் அறிந்தும் அறியாமலும்தெரிந்தும் தெரியாமலும் நமது ஐம்புலன் மூலமாக எவ்வளவோ செய்திகளைச் சேகரிக்கிறோம். ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கும் பொழுது நமது மூளை (வேலை இல்லாத நாட்களில் sunday வீட்டை ஒழுங்கு படுத்துதல் போல) நாம் சேகரித்த செய்திகளை அது சம்பந்தப்பட்ட பழைய செய்தி சேமிக்கபட்ட நினைவு அறைகளிலோ அல்லது அதன் தொடர்புடைய பக்கத்து அறைகளிலோ நிரந்தர சேமிப்பாக மாற்றுகிறது. அத்துடன் பழைய செய்திக்கும் புதிய செய்திக்கும் சேர்ந்த இணை இழைகளை (Hyper link) குறிப்பேட்டு பகுதிகளில் எழுதி ஒரு மிகப்பெரிய இணையதள வலைப்பின்னல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு செய்தித்துணுக்கு எவ்வளவு இணைப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேடுதலில் வேகமாக கிடைக்கிறது (Google போல). ஆனால் இப்படி செய்திகளை அடுக்கும் வேளை நடக்கும் பொழுது தற்காலிகமாக இன்றைய செய்தியையும் கடந்த காலச்செய்தியையும் கலந்த ஒரு குழப்பமான ஒரு நினைவு (எக்கச்சக்கமான hyperlink உள்ள ஒரு வலைத்தளம் எப்படி நாம் புறப்பட்ட இடத்திலிருந்து சம்பந்தமில்லாத பல தகவல்களைத்தேடி சேகரித்து ஒரு கலவையான அறிவைப்பெறுகிறோமோ ) கனவாக பரிணமிக்கிறது என்பதே என் எண்ணம்.

Friday, August 26, 2005

இந்து மதத்தில் அறிவியல் (2)- சோதனைக்குழாய் குழந்தை

மகா பாரதத்திலிருந்து -குந்திக்கு தருமர் பிறந்த செய்தி கேட்ட காந்தாரி தனக்கு இன்னும் குழந்தை பிறக்காததால் கோபமுற்று தன் கருவினை சுவற்றில் முட்டி ப்ரசவத்தை துரிதப்படுத்தினாள். ஆனால் பிறந்த்ததோ ஒரு பெரும் சதைப்பிண்டம். அதனால் வேதனையுற்ற காந்தாரி முனிவர் வியாசரிடம்வேண்ட அவர் அந்த சதைப்பிண்டத்தை 100 பங்காக பிரித்து 100 குடங்களில் இட்டார். பின் எஞ்சிய ஒரு பகுதியை மற்றொரு குடத்திலிட்டார். அந்தக்குடங்களில் இருந்து துரியோதனனும் அவனுடைய 99 சகோதரர்களும் ஒரு சகோதரி (துஷ்சலா)யும் பிறந்ந்தனர்.

இதில் வ்யாசர் செய்தது சோதனைக்குழாய் குழந்தை அல்லது க்ளோனிங் வகையை நினைவு படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது

Friday, August 05, 2005

இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி விஷ்ணுவின் தசாவதாரம் மூலமாக கோடிட்டு காட்டப்படுகிறது.
1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)
2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)
3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)
4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)
5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)
6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)
8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)
9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்)
10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)

Saturday, June 18, 2005

ஆண்டவன் ஓர் அனுபவம்

ஆண்டவன்

பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்

வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்

அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

- கண்ணதாசன்

Friday, June 17, 2005

முதல் பயணம்

சிறகடித்து பறக்கும் சிந்தனைகளை இணயத்தில் பதிக்க என் முதலடி.