Tuesday, May 27, 2008
காலமானார் என்ற சொல்லை பற்றி
இது நாள் வரை காலமானார் என்ற சொல் இறந்தார் என்ற பொருளில் மட்டுமே உணர்ந்திருந்தேன். நேற்று திடீரென்று ஒரு சிந்தனை. ஒரு மனிதன் உயிருடன் வாழும் பொழுது இடம் மற்றும் நேரம் இரண்டின் தொகுப்பில் தான் அவரை உணர முடியும். யார் supersubra என்றால் இதோ இந்த ஊரில் இந்த இடத்தில் இருப்பார் அவர்தான் என்று சொல்லமுடியும். ஆனால் ஒருவர் காலமானார் என்றால் அவர் காலமாக மாறிவிட்டார். நேரம் இடம் என்ற இரண்டு பரிமாணங்களில் உணரப்பட்ட அவர் இப்பொழுது காலத்துடன் ஒன்றி விட்டார். ஒரு பரிமாணமாக மாறிவிட்டார். He became time என்பதுதான் என் மனதில் தோன்றிய எண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Agree with the above comment.
Web Designing
Post a Comment